உடுமலையில் வனத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்: வன ஊழியர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உடுமலை வனசரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உடுமலை வனசரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் ஆலோசனைப்படியும், துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா முன்னிலையிலும் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில், வனப் பணியாளர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கண், பல் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பொது மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர் உட்பட 5க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர்.



உடுமலை வனச்சரகர் மணிகண்டன், மருத்துவர்கள் மற்றும் உடுமலை, திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள வன ஊழியர்கள், வனக்காப்பாளர்கள் பலரும் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இந்த முயற்சி வனத்துறை ஊழியர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் உதவியது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...