மருத்துவர் பற்றாக்குறை: நவீன தொழில்நுட்பத்தின் தேவையை வலியுறுத்தும் டாடா குழும தலைவர்

கோவையில் நடைபெற்ற நிகழ்வில், டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இந்தியாவின் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் சுகாதார சேவை சவால்கள் குறித்து பேசினார். நவீன தொழில்நுட்பத்தின் பங்கை வலியுறுத்தினார்.


Coimbatore: டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், கோவையில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி. கேன்சர் ஆராய்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வின் போது, இந்தியாவின் சுகாதாரத் துறையில் உள்ள சவால்கள் குறித்து அவர் விரிவாக பேசினார்.


நடராஜன் சந்திரசேகரன் கூறியதாவது: "இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 1700 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் மிகவும் பின்தங்கிய நிலையைக் காட்டுகிறது. மேலும், மருத்துவர்கள் பெரும்பாலும் நகரப்பகுதிகளில் குவிந்துள்ளனர், ஆனால் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்."


"வடகிழக்கு மாநிலங்களில் அடிப்படை மருத்துவ சேவைகளைப் பெற மக்கள் 20 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நாட்டில் 5,00,000 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தலையீடு மிகவும் அவசியமாகிறது," என்று அவர் வலியுறுத்தினார்.


மேலும், நவீன தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், "ஜப்பான் போன்ற நாடுகள் மூளை முடக்குவாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வளமான வாழ்க்கையை வழங்க ஆய்வுகள் நடத்தி வருகின்றன," என்றார்.


சர்க்கரை நோய் பாதிப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "2010-ல் 50 மில்லியனாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது 75 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது விரைவில் 100 மில்லியனை எட்டக்கூடும். எனவே, புதிய மருத்துவ முறைகள் அவசியம்," என்று அவர் கூறினார்.


"இந்தியாவில் பல்வேறு நோய்கள் காணப்படுவதால், புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகம். இந்த கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பயனளிக்கும்," என்று நடராஜன் சந்திரசேகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...