கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து: மாநகராட்சியின் முயற்சிகள் குறித்த விரிவான அறிக்கை

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, அதனை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தீ விபத்து, அதனை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள், பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் ஆகியவை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கோயம்புத்தூர் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 257.04 சதுர கி.மீ ஆகும். இம்மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 100 வார்டுகளைக் கொண்டுள்ளது. தற்போதைய மக்கள் தொகை 2,288,052 ஆகும். மாநகராட்சி எல்லைக்குள் 5,25,290 வீடுகள், 42,180 வணிக வளாகங்கள், 879 உணவகங்கள், 106 தங்கும் விடுதிகள், 94 திருமண மண்டபங்கள் மற்றும் 20 காய்கறி சந்தைகள் உள்ளன. தினசரி 1,055 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.


கடந்த ஏப்ரல் 6, 2024 அன்று மாலை 5 மணியளவில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், கோடைக்காலம் என்பதாலும் தீ விரைவாக பரவி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைகள் எரியத் தொடங்கின. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் புகை மூட்டம் பரவியது.


தீயை கட்டுப்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. நாளொன்றுக்கு சராசரியாக 13 தீயணைப்பு வாகனங்களும், ஒரு வாகனத்திற்கு சுமார் 14 தீயணைப்பு வீரர்களும் பணியாற்றினர். தண்ணீர் சப்ளை செய்ய நாளொன்றுக்கு 23 முதல் 42 வரையிலான தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன.


தீ உச்சம் பெற்ற 12 நாட்களில் தினமும் சுமார் 500 முதல் 600 நபர்கள் வரை சுழற்சி முறையில் பணியாற்றினர். இதில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவக் குழுவினர் என மூன்று குழுக்களாக அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தீ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு தரமான உணவு, குடிநீர், மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இத்தீ தடுப்பு பணிக்காக ரூ.27.52 இலட்சம் செலவிடப்பட்டது.


இந்த விவரங்கள் ஜூலை 26, 2024 அன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பார்வைக்கும் பதிவிற்கும் வைக்கப்பட்டது. மேலும், தீயை கட்டுப்படுத்திய மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாமன்றக் கூட்டத்தில் துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...