தாராபுரம் அருகே மூலனூரில் நடைபெற்ற முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் பந்தயத்தை துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ரேக்ளா பந்தயத்தை காலை ஏழு மணி அளவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கு பெற்றன.



முதலில் நடைபெற்ற 200 மீட்டர் ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான காளைகள் சீறி பாய்ந்தன. 200 மற்றும் 300 மீட்டர் ரேக்ளா போட்டிகளில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்வு மூலனூர் பகுதியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...