அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வழங்கிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வழங்கிடக்கோரி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அம்மனுவில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இன்று முதல் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 2 முதல் 5 வயதுவரை உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது சிறார்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்புள்ளன. கோடை விடுமுறை என்பதே குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடி மகிழ அளிக்கப்படும் விடுமுறை காலம். எனவே, அங்கண்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளித்திட அரசு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...