அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வழங்கிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வழங்கிடக்கோரி தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அம்மனுவில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இன்று முதல் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 2 முதல் 5 வயதுவரை உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது சிறார்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்புள்ளன. கோடை விடுமுறை என்பதே குழந்தைகள் மற்றவர்களுடன் விளையாடி மகிழ அளிக்கப்படும் விடுமுறை காலம். எனவே, அங்கண்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளித்திட அரசு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க ஊழியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...