கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து: மாநகராட்சியின் தீவிர நடவடிக்கைகள்

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி மேற்கொண்ட விரிவான நடவடிக்கைகள் குறித்த விவரங்கள். தீயணைப்பு, மீட்பு பணிகள் மற்றும் செலவினங்கள் பற்றிய தகவல்கள்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏப்ரல் 6, 2024 அன்று மாலை 5 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. கோடைக்காலம் மற்றும் அதிக காற்றின் வேகம் காரணமாக தீ விரைவாக பரவி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இருந்த குப்பைகள் எரியத் தொடங்கின.

இந்த தீ விபத்தின் காரணமாக வெள்ளலூர் சுற்றுப்புறங்களில் அதிகளவில் புகை மூட்டம் பரவியது. பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 தீயணைப்பு வாகனங்கள், ஒவ்வொரு வாகனத்திற்கும் 14 தீயணைப்பு வீரர்கள் வீதம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்க, நாள் ஒன்றுக்கு 23 முதல் 42 வரையிலான தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன. தீ உச்சம் பெற்ற 12 நாட்களில், தினமும் சுமார் 500 முதல் 600 நபர்கள் வரை சுழற்சி முறையில் பணியாற்றினர். இதில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் அடங்குவர்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் IAS, நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு IAS, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி IAS மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.

தீ தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டதுடன், 24 மணி நேரமும் குடிநீர், மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இத்தீ தடுப்பு பணிக்காக மொத்தம் ரூ.27.52 இலட்சம் செலவிடப்பட்டது. இச்செலவினங்கள் குறித்த விவரங்கள் ஜூலை 26, 2024 அன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பார்வைக்கும் பதிவிற்கும் வைக்கப்பட்டன.

தீ தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு தீயை கட்டுப்படுத்திய மாநகராட்சி ஆணையாளர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாமன்றக் கூட்டத்தில் துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...