தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக இருக்கும்: அமைச்சர் முத்துசாமி

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவகத்தை திறந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜி குறித்தும், வீடு கட்டும் திட்டம் பற்றியும் கருத்து தெரிவித்தார்.


கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.



வீடு கட்டும் திட்டம் குறித்து பேசிய அவர், "எளிய மக்கள் காலதாமதமின்றி வீடு கட்டுவதற்காக உடனடி அனுமதி கிடைப்பதற்காக இத்திட்டத்தை முதல்வர் துவக்கியுள்ளார். இதில் சதுர அடிக்கு இரு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிமுகவினர் கூறுவது தவறு. முன்பு போல அனுமதி வாங்கும் நடைமுறை இருந்தால் மக்களுக்கு எவ்வளவு அலைச்சல், எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அதிக கட்டணம் இருந்தால் முதல்வர் ஆய்வு செய்வார். ஆனால் அப்படி எதுமில்லை," என்றார்.

செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், "வருகின்ற தேர்தலில் செந்தில் பாலாஜி இருந்தால் பலமாக தான் இருக்கும். அவர் இப்போது சிறையில் இருப்பது எங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் வருத்தம் தான்," என்று கூறினார்.

துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு பதிலளித்த முத்துசாமி, "இது எங்கள் கட்சி. யாருக்கும் துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் தான் முடிவு செய்வோம்," என தெரிவித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...