கோவையில் முதல் முறையாக மகளிர் சுய உதவிக் குழுவிற்கு நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் ட்ரோன் வழங்கப்பட்டது

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் பத்ரகாளி அம்மன் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த வசந்தாமணிக்கு ட்ரோன் வழங்கப்பட்டது. இது விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்.



Coimbatore: கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்ணுக்கு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை அறிவித்த நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 15,000 ட்ரோன்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக 1261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, நாடு முழுவதும் 1095 மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய ட்ரோன் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் 44 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி (வடக்கு) வட்டாரம் ராமபட்டினம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பத்ரகாளி அம்மன் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த வசந்தாமணிக்கு ட்ரோன் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோனின் மதிப்பு சுமார் 6 முதல் 8 லட்சம் ரூபாய் ஆகும்.



வசந்தாமணி தனது பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அவருக்கு சென்னையில் ட்ரோன் பயிற்சியும், உரிமமும் வழங்கப்பட்டுள்ளது. இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ட்ரோனை இயக்கிக் காண்பித்தார்.

இந்த ட்ரோன் மூலம் வயல்வெளிகளில் திரவ உரங்கள், இயற்கை சார்ந்த மீன் அமிலம் போன்ற பொருட்களைத் தெளிக்க முடியும். மேலும், இந்த ட்ரோனை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடலாம். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவிற்கும், PLF கூட்டமைப்பிற்கும் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் விவசாயிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...