கோவை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஆய்வு

கோவை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஜூலை 26ஆம் தேதி ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (ICCC) செயல்பாடுகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் IAS நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அமைந்துள்ள இந்த மையத்திற்கு ஜூலை 26ஆம் தேதி விஜயம் செய்த ஆனந்த் மோகன், மையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் IAS உடனிருந்தார்.



ஆய்வின் போது துணை ஆணையாளர் K. சிவகுமார், மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், நகர்நல அலுவலர் (பொ) Dr. பூபதி, உதவி ஆணையர் சந்தியா ஆகியோர் உடனிருந்தனர். மேலும், மண்டல சுகாதார அலுவலர்களான குணசேகரன், இராமச்சந்திரன், திருமால் மற்றும் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.



ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) என்பது நகரின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் மையமாக செயல்படுகிறது. இது நகர நிர்வாகத்தை மேம்படுத்தவும், குடிமக்களுக்கான சேவைகளை திறம்பட வழங்கவும் உதவுகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட ஆனந்த் மோகன், அதன் பயன்பாடு குறித்து விரிவாக கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...