பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு: குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய இருவருக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் சிறை தண்டனையும் தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏவும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சங்கர நாராயணன் ஆகியோர் வானதி சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகளை பதிவிட்டனர். இது தொடர்பாக வானதி சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

7 ஆண்டுகள் கழித்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளிகள் இருவருக்கும் ஒரு நாள் சிறை தண்டனையும், தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், "சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களை களங்கப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கிற்காக 7 ஆண்டுகள் நீதிமன்றத்தில் வாதாடிய உதவி வழக்கறிஞர்களுக்கும், தன்னுடன் துணை நின்ற கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தத் தீர்ப்பானது சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை பதிவிடுவோருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...