பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு: குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய இருவருக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் சிறை தண்டனையும் தலா ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதி பாஜக எம்எல்ஏவும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சங்கர நாராயணன் ஆகியோர் வானதி சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகளை பதிவிட்டனர். இது தொடர்பாக வானதி சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

7 ஆண்டுகள் கழித்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளிகள் இருவருக்கும் ஒரு நாள் சிறை தண்டனையும், தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், "சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களை களங்கப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கிற்காக 7 ஆண்டுகள் நீதிமன்றத்தில் வாதாடிய உதவி வழக்கறிஞர்களுக்கும், தன்னுடன் துணை நின்ற கட்சி உறுப்பினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தத் தீர்ப்பானது சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை பதிவிடுவோருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...