வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளை கண்டித்து கோவையில் சட்ட ஆணையத்தின் பரிந்துரை நகலை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதி முறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்ட ஆணையம் வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை நகலை வழங்கியுள்ளது.

இந்த விதிமுறைகள் வழகறிஞர்களின் உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளதாகக் கூறி இன்று கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் முடக்கியுள்ளன.

இந்நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக இன்று பிற்பகல் வழக்கறிஞர்கள் சட்ட ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ள நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளானது வழக்கறிஞர்கள் தொழில் செய்ய முடியாத படி அபராதம், சிறை தண்டனை போன்றவை கிடைக்கும் அளவிற்கு திருத்தங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த திருத்தங்கள் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வழகறிஞர்கள் சார்பில் அடுத்த மாதம் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தில்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...