பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: பொள்ளாச்சியில் கொண்டாட்டம்

பொள்ளாச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 86வது பிறந்தநாளையும், கட்சியின் 36வது ஆண்டு தொடக்க விழாவையும் முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


கோவை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 86வது பிறந்தநாளையும், கட்சியின் 36வது ஆண்டு தொடக்க விழாவையும் முன்னிட்டு பொள்ளாச்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



கோவை தெற்கு மாவட்ட பாமக சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் பிரிவில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட செயலாளர் வீரான் ராவுத்தர் தலைமையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், கோவை தெற்கு மாவட்டப் பகுதிகளில் பாமகவை வலுப்படுத்துவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர்களான வாணி ஆறுமுகம், என்.எம். ராமு, தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், அஷ்ரப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...