கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்

கோவையில் புதன்கிழமை, மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவையில் புதன்கிழமை (24.07.2024) அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு, புதிய கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் வழங்கினார்.



கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள சாயிபாபா காலனி, கணபதி, மற்றும் மணியகாரன்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு வார்டுகளின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

சாயிபாபா காலனியில் நடைபெற்ற நிகழ்வில், பகுதி திமுக செயலாளர் கே.எம்.ரவி முன்னிலையில், வார்டு எண்கள் 18, 31, 32, 45 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பேபிசுதா ரவி, மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



கணபதி பகுதியில், பகுதி திமுக செயலாளர் கோவை லோகு முன்னிலையில், வார்டு எண்கள் 29, 30, 46, 47 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் பகுதி துணைச் செயலாளர் வி.டி.செந்தில்குமார், அவைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மணியகாரன்பாளையம் பகுதியில், பகுதி திமுக செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன் முன்னிலையில், வார்டு எண்கள் 19, 20, 25 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அவைத் தலைவர் எஸ்.வெள்ளிங்கிரி, மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் சி.வி.தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அனைத்து நிகழ்வுகளிலும் கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், மற்றும் BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...