கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்

கோவையில் புதன்கிழமை, மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவையில் புதன்கிழமை (24.07.2024) அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு, புதிய கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் வழங்கினார்.



கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள சாயிபாபா காலனி, கணபதி, மற்றும் மணியகாரன்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு வார்டுகளின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

சாயிபாபா காலனியில் நடைபெற்ற நிகழ்வில், பகுதி திமுக செயலாளர் கே.எம்.ரவி முன்னிலையில், வார்டு எண்கள் 18, 31, 32, 45 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பேபிசுதா ரவி, மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



கணபதி பகுதியில், பகுதி திமுக செயலாளர் கோவை லோகு முன்னிலையில், வார்டு எண்கள் 29, 30, 46, 47 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் பகுதி துணைச் செயலாளர் வி.டி.செந்தில்குமார், அவைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மணியகாரன்பாளையம் பகுதியில், பகுதி திமுக செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன் முன்னிலையில், வார்டு எண்கள் 19, 20, 25 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அவைத் தலைவர் எஸ்.வெள்ளிங்கிரி, மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் சி.வி.தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அனைத்து நிகழ்வுகளிலும் கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், மற்றும் BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...