ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மது அருந்தி பலர் உயிரிழப்பதாகவும், நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



ஆனைகட்டியில் 'பிரண்ட்ஸ்' என்ற பெயரில் தனியார் கிளப் இயங்கி வருவதாகவும், அங்கு மது அருந்தி தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக தென்னிந்திய பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் முருகவேலு கூறுகையில், "கடந்த 2019ல் நாங்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு ஆனைகட்டியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் 23 கிலோமீட்டருக்கு அப்பால் தான் இந்த கடை நிறுவப்படும் என்று உறுதியளித்தது. ஆனால் தற்போது ஆனைகட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கிளப்புகளில் விற்கப்படும் மதுபானங்களை அருந்தி, கடந்த மூன்று மாதங்களில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

மேலும் அவர், "பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி எங்கள் பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்றித் தர வேண்டும். எங்கள் சமூகத்தினரை மது பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களது நிலங்களை அபகரிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அரசு நிர்வாகம் ஒத்துழைப்பு அளித்து, பழங்குடி இன மக்களின் நிலங்களை வாங்குவதோ விற்பதோ கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

அதுமட்டுமின்றி, அப்பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என்றும், தற்போது வழங்கப்படும் பொருட்களால் தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்றும் முருகவேலு குற்றம்சாட்டினார்.

"தொடர்ந்து நான்காண்டுகளாக இந்த பிரச்சனைகள் குறித்து மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் சமூகத்தினை பாதுகாக்க வேண்டும்" என்று முருகவேலு வலியுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...