உக்கடம் சிஎம்சி காலனியில் வாக்குறுதி அளித்த வீடுகளை கட்டித்தர கோரிக்கை: இந்து மக்கள் கட்சி மனு

கோவை உக்கடம் சிஎம்சி காலனியில் வாக்குறுதியளித்த வீடுகளைக் கட்டித்தரக் கோரி இந்து மக்கள் கட்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளது. மீன் மார்க்கெட் அகற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தருவதாக மாநகராட்சி அதிகாரிகளும் குடிசை மாற்று வாரியமும் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், இதுவரை 222 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீதமுள்ள வீடுகளை உடனடியாகக் கட்டித் தர வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டை அகற்ற வேண்டும் என்றும் கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக இன்று மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

மனுவில், "உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை 222 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வீடுகளை விரைவில் கட்டித் தர வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் காரணமாக சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை மாநகராட்சி ஆணையர் பெற்றுக்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...