உடுமலையில் தங்கும் விடுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் - வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காந்தளூர் மறையூர் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் தங்கும் விடுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள காந்தளூர் மறையூர் சாலையில் தனியார் பள்ளி அருகில் தங்கும் விடுதி ஒன்று கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இந்த பகுதியில் சில தினங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தங்கும் விடுதியின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், யானைகள் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறின.



தங்கும் விடுதியில் யாரும் இல்லாத காரணத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால், வனத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...