ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான இந்த நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த பழங்குடியினருக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன், ஃபிட்டர், ஒயர்மேன், வெல்டர் ஆகிய பிரிவுகளில் இருபாலருக்கும் நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று சேர்க்கை பெறலாம்.


சேரும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவற்றில் இலவச பேருந்து அட்டை, வருகையின் அடிப்படையில் மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகை, இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள், மிதிவண்டி ஆகியவை அடங்கும்.


மேலும், பயிற்சி முடித்த அனைவருக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். விடுதியின் காலியிடங்களைப் பொறுத்து உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55694, 99945-55884, 94430-15904, 99421-28234, 95002-49705, 98657-96373 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...