வரும் பட்ஜெட்டில் தொழில்துறை கோரிக்கைகளை நிறைவேற்ற காட்மா வேண்டுகோள்

கோவையில், வரும் பட்ஜெட்டில் தொழில்துறை கோரிக்கைகளை நிறைவேற்ற காட்மா சங்கத் தலைவர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். முத்ரா கடன் உச்சவரம்பு உயர்வு, தொழிற்பூங்காக்கள் அமைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்றுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சிவக்குமார், வரும் பட்ஜெட்டில் தொழில்துறை விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (ஜூலை 22) வெளியிடப்பட்ட அறிக்கையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில முக்கிய திட்டங்களை காட்மா சங்கம் வரவேற்றுள்ளதாக சிவக்குமார் தெரிவித்தார். முத்ரா கடன்களுக்கான உச்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதும், நெருக்கடிக் காலத்தில் தொழில்களை ஊக்குவிக்க கடன் வழங்கும் அளவு ரூ.100 கோடியாக அதிகரிக்கப்படுவதும் இதில் அடங்கும்.

தொழில் முனைவோர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் சொத்து மதிப்பின் அடிப்படையில் கடன் மதிப்பீடு செய்யப்படும் என்ற அறிவிப்பையும் சிவக்குமார் பாராட்டினார். மேலும், நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற திட்டத்தையும், அரசு-தனியார் பங்களிப்புடன் தொழிலாளர் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என்ற முடிவையும் அவர் வரவேற்றார்.

பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பும், 1000 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்ற திட்டமும் பாராட்டப்பட்டன. தாயிரம், இரும்பு உள்ளிட்ட 20 வகையான ஸ்கிராப் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கப்பட்டது.

இருப்பினும், நுகர்வோர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் வரிவிகிதக் குறைப்பு, வங்கிக் கட்டண விகிதங்களில் குறைப்பு, நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் மூலப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்தல் ஆகிய கோரிக்கைகளை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றித்தர வேண்டும் என்று சிவக்குமார் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் தொழில்முனைவோர்களுக்கு பெரிதும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...