மேட்டுப்பாளையம், காரமடையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், காரமடை பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு மேற்கொண்டார்.



மேட்டுப்பாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதேபோல், காரமடை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மேலும், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரின் கோரிக்கையை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆய்வின்போது மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...