கோவையில் போக்குவரத்து மாற்றம்: மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 100 அடி சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வழியில் மாற்றம் செய்ய உத்தேசம். மக்கள் கருத்து தெரிவிக்க காவல்துறை அழைப்பு.


கோவை: கோவை மாநகர காவல்துறை இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, 100 அடி சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் வாகனங்களுக்கான புதிய வழித்தடம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடம் பின்வருமாறு: காந்திபுரம் 100 அடி ரோடு ஷீலா மருத்துவமனை சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி, கொங்குநாடு மருத்துவமனை, கிராஸ்கட் ரோடு, வடகோவை மேம்பாலத்தின் வலது பக்கம் சர்வீஸ் ரோட்டில் திரும்பி பவர்ஹவுஸ் வழியாக சிவானந்தா காலனி மற்றும் 100 அடி ரோட்டிற்கு செல்லலாம். இந்த சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. மக்கள் தங்கள் கருத்துக்களை ஜூலை 31, 2024க்கு முன்பாக, 0422-2212567 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், அவினாசி சாலையில் நடைபெற்று வரும் உயர்மட்ட பாலப் பணிகள் காரணமாகவும், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் பொதுமக்கள் சிரமப்படுவதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, ஆம்னி பேருந்து பயணிகள் ஏற்றும் இடங்களாக காந்திபுரம் மற்றும் டைடல் பார்க் ஆகிய இரண்டு இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து பேருந்துகளில் ஏற வேண்டும் என்றும், தாமதமாக வரும் பயணிகளுக்காக பேருந்துகளை நிறுத்தி வைக்க முடியாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் அதிக நேரம் சாலையில் நிறுத்தி வைக்கப்படுவது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...