மத்திய பட்ஜெட் சிறப்பானது - கோவை இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்பு

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) செய்தியாளர் சந்திப்பில், மத்திய பட்ஜெட் குறித்த கருத்துக்களை பகிர்ந்தனர். இரும்பு, காப்பர் கழிவுகள் மற்றும் தங்கம் மீதான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்களை வரவேற்றனர்.


கோவை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் CII கோவை மாவட்ட சேர்மன் ராதாகிருஷ்ணன் பேசினார்.



கோவையைப் பொறுத்தவரை, மத்திய பட்ஜெட்டில் இரும்பு கழிவுகளுக்கான (ferrous scrap) இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக்கியுள்ளது கோவை நிறுவனங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், காப்பர் கழிவுகளுக்கான (copper scrap) இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் காப்பர் கச்சா பொருட்களின் விலை குறையும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்கத்திற்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது தங்க நகை உற்பத்தியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக அமைந்துள்ளதாக ராதாகிருஷ்ணன் கூறினார். உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கப்படும். முத்ரா கடன் தொகை 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த பட்ஜெடாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பினர் பாராட்டினர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...