கோவை நஞ்சுண்டாபுரம் மின்சார சுடுகாடு அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்ற டாஸ்மாக் ஊழியர் கைது

கோவை நஞ்சுண்டாபுரம் மின்சார சுடுகாடு அருகே டாஸ்மாக் ஊழியர் மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராமநாதபுரம் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின்சார சுடுகாடு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ராமநாதபுரம் போலீசார் நேற்று (ஜூலை 22) மாலை அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமூர்த்தி (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

கைதான திருமூர்த்தியிடமிருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களே இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...