கோவையில் மூதாட்டி தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

கோவையில் 70 வயது மூதாட்டி வசந்தா, நகை மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் கருணை கொலை அல்லது தற்கொலைக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 70 வயதான மூதாட்டி வசந்தா என்பவர் தன்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் கே.ஜி. போஸ் நகரைச் சேர்ந்த வசந்தா, தனது மனுவில் கூறியிருப்பதாவது: "விமலா கீர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து என்னிடமிருந்து 14 பவுன் நகை வாங்கி மோசடி செய்தனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், முறையான விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறது."

"குற்றவாளிகளுக்கு சாதகமாக குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக உள்ள காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "மாநகர காவல் ஆணையர் சிங்காநல்லூர் காவல் நிலைய அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனி எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, என்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்," என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும், முதியோர்களுக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...