கோவை மருதமலை அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட 10 காட்டு யானைகள்

கோவை மருதமலை அருகே 10 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: கோவை மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் ஜூலை 21 அன்று சுமார் 10 காட்டு யானைகள் முகாமிட்டன. இந்த யானைக் கூட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐஓபி காலனி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

குடியிருப்பு பகுதியில் யானைகள் நுழைந்ததை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், யானைக் கூட்டத்தை மருதமலை வனப் பகுதிக்குள் விரட்டினர்.

இருப்பினும், யானைகள் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் திரும்பி வந்தன. இந்த காட்சியை அப்பகுதி மக்கள் தங்கள் கைபேசிகளில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தடாகம், மருதமலை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையச் செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...