உடுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், நாய் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

1. பாரம்பரிய யானை வழித்தடங்களை விடுத்து புதிய வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டாம்.

2. சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும்.

3. காட்டு பன்றி, குரங்கு, மான், மயில்களால் விவசாய பயிர்கள் நாசமாவதை தடுக்க வேண்டும்.

4. கேரள அரசைப் போன்று பன்றிகளை கட்டுப்படுத்த வாய் வெடி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.



5. வனவிலங்குகளால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் சேதமாகும் பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

6. கிராமப்புறங்களில் நாய்களால் உயிரிழக்கும் ஆடு, கன்றுகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

7. நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ் ஆர் மதுசூதனன், மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, மாவட்ட துணைத்தலைவர் எஸ் பரமசிவம், மடத்துக்குளம் தாலூகா செயலாளர் வீரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...