உடுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், நாய் தொல்லை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

1. பாரம்பரிய யானை வழித்தடங்களை விடுத்து புதிய வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டாம்.

2. சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும்.

3. காட்டு பன்றி, குரங்கு, மான், மயில்களால் விவசாய பயிர்கள் நாசமாவதை தடுக்க வேண்டும்.

4. கேரள அரசைப் போன்று பன்றிகளை கட்டுப்படுத்த வாய் வெடி மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.



5. வனவிலங்குகளால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் சேதமாகும் பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

6. கிராமப்புறங்களில் நாய்களால் உயிரிழக்கும் ஆடு, கன்றுகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.

7. நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ் ஆர் மதுசூதனன், மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, மாவட்ட துணைத்தலைவர் எஸ் பரமசிவம், மடத்துக்குளம் தாலூகா செயலாளர் வீரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...