பொள்ளாச்சியில் மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் திறக்கக் கோரி MLA மனு

பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியில் 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என பொள்ளாச்சி MLA ஜெயராமன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


Coimbatore: பொள்ளாச்சி வடுகபாளையம் செல்லகுமாரர் விஸ்தரிப்பு வீதியில் உள்ள இரயில்வே கேட்டை (LC.NO:123) மீண்டும் திறக்கக் கோரி பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்த இரயில்வே கேட் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த பகுதியில் இருந்து பொள்ளாச்சி நகரத்திற்கும், கோவை ரோட்டிற்கும் செல்வதற்கு இந்த ஒரு வழித்தடம் மட்டுமே மிக அருகாமையில் இருந்தது. பாலக்காடு ரோட்டில் இருந்த மற்றொரு வழித்தடம் மேம்பாலம் கட்டியதற்குப் பிறகு அடைக்கப்பட்டுவிட்டது.



தற்போது இந்த இரயில்வே கேட் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதி தீவு போல் ஆகிவிட்டதாக MLA ஜெயராமன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ரயில்வே கேட்டிற்கு அருகாமையில் வாழும் சுமார் 4000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் 4 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முன்பு 108 ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் மற்றும் மினி பஸ் ஆகியவை இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி வந்தன. மேலும் 1937ஆம் ஆண்டு முதல் இந்த கேட்டிற்கு அருகாமையில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பல ஆண்டுகளாகப் பயன்பட்ட வழித்தடத்தை பொதுமக்கள் எப்போதும் பயன்படுத்திக் கொள்ள LC.NO:123 இரயில்வே கேட்டை திறந்து தருமாறு பொதுமக்கள் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் MLA ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...