சேலம் நாமக்கல் கரூர் சிறப்பு பயணிகள் ரயிலில் குறைந்த அளவு பயணிகளே பயணம்

சேலம் நாமக்கல் கரூர் ரயில் தடத்தில் பயணிக்கும் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட சிறப்பு பயணிகள் ரயில்கள் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தால் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் எண் 06739- ஞாயிற்றுக் கிழமை சேவை- சேலம்- கரூர்- புறப்படும் நேரம் 06.00, வந்தடையும் நேரம் 08.10.

ரயில் எண் 06740- ஞாயிற்றுக்கிழமை சேவை- கரூர்- சேலம்- புறப்படும் நேரம் 08.30, வந்தடையும் நேரம் 10.30.

ரயில் எண் 06743- தினசரி சேவை- சேலம்- கரூர்- புறப்படும் நேரம் 11.30, வந்தடையும் நேரம் 13.30.

ரயில் எண் 06744 - தினசரி சேவை- கரூர்- சேலம் - புறப்படும் நேரம் 14.40, வந்தடையும் நேரம் 16.40

இந்த ரயில்களின் சராசரி பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதாவது 13 முதல் 21 சதவீதம் மட்டுமே உள்ளது. 

சிறப்பு பயணிகள் ரயில்களின் இயக்கம் போதுமான பயணிகள் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே தொடர இயலும். இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் மேலே குறிப்பிட்ட நேரங்களில் வாரநாட்களிலும் இத்தடத்தில் பயணிகள் ரயில்சேவை இல்லாமல் போகும். இந்த ரயில்கள் 16.09.2015 முதல் இயக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்துள்ளது.

எனவே, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிர்வாகம் பயணிகளை இந்த ரயிலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்கிறது. பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தால், இந்த சிறப்பு பயணிகள் ரயில்சேவைவை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...