சேலம் நாமக்கல் கரூர் ரயில் தடத்தில் பயணிக்கும் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட சிறப்பு பயணிகள் ரயில்கள் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தால் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் எண் 06739- ஞாயிற்றுக் கிழமை சேவை- சேலம்- கரூர்- புறப்படும் நேரம் 06.00, வந்தடையும் நேரம் 08.10.
ரயில் எண் 06740- ஞாயிற்றுக்கிழமை சேவை- கரூர்- சேலம்- புறப்படும் நேரம் 08.30, வந்தடையும் நேரம் 10.30.
ரயில் எண் 06743- தினசரி சேவை- சேலம்- கரூர்- புறப்படும் நேரம் 11.30, வந்தடையும் நேரம் 13.30.
ரயில் எண் 06744 - தினசரி சேவை- கரூர்- சேலம் - புறப்படும் நேரம் 14.40, வந்தடையும் நேரம் 16.40
இந்த ரயில்களின் சராசரி பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதாவது 13 முதல் 21 சதவீதம் மட்டுமே உள்ளது.
சிறப்பு பயணிகள் ரயில்களின் இயக்கம் போதுமான பயணிகள் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே தொடர இயலும். இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் மேலே குறிப்பிட்ட நேரங்களில் வாரநாட்களிலும் இத்தடத்தில் பயணிகள் ரயில்சேவை இல்லாமல் போகும். இந்த ரயில்கள் 16.09.2015 முதல் இயக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்துள்ளது.
எனவே, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிர்வாகம் பயணிகளை இந்த ரயிலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்கிறது. பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தால், இந்த சிறப்பு பயணிகள் ரயில்சேவைவை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ரயில் எண் 06739- ஞாயிற்றுக் கிழமை சேவை- சேலம்- கரூர்- புறப்படும் நேரம் 06.00, வந்தடையும் நேரம் 08.10.
ரயில் எண் 06740- ஞாயிற்றுக்கிழமை சேவை- கரூர்- சேலம்- புறப்படும் நேரம் 08.30, வந்தடையும் நேரம் 10.30.
ரயில் எண் 06743- தினசரி சேவை- சேலம்- கரூர்- புறப்படும் நேரம் 11.30, வந்தடையும் நேரம் 13.30.
ரயில் எண் 06744 - தினசரி சேவை- கரூர்- சேலம் - புறப்படும் நேரம் 14.40, வந்தடையும் நேரம் 16.40
இந்த ரயில்களின் சராசரி பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதாவது 13 முதல் 21 சதவீதம் மட்டுமே உள்ளது.
சிறப்பு பயணிகள் ரயில்களின் இயக்கம் போதுமான பயணிகள் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே தொடர இயலும். இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் மேலே குறிப்பிட்ட நேரங்களில் வாரநாட்களிலும் இத்தடத்தில் பயணிகள் ரயில்சேவை இல்லாமல் போகும். இந்த ரயில்கள் 16.09.2015 முதல் இயக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்துள்ளது.
எனவே, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிர்வாகம் பயணிகளை இந்த ரயிலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்கிறது. பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தால், இந்த சிறப்பு பயணிகள் ரயில்சேவைவை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.