பொள்ளாச்சி ஆனைமலையில் நெல் நடவுப் பணிகள் தீவிரம்; விலை குறைவால் விவசாயிகள் வேதனை

ஆனைமலையில் முதல் போக நெல் சாகுபடிக்கு நடவுப் பணிகள் தீவிரம். உரம் விலை உயர்வு, குறைந்த விலை காரணமாக நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. விவசாயிகள் நிரந்தர கொள்முதல் நிலையம் கோருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடிக்கான நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



ஆழியார் அணை பாசனத்தின் மூலம் தென்னை, வாழை மற்றும் நெல் சாகுபடி செய்யப்படும் இப்பகுதியில், முன்பு 6,400 ஏக்கரில் இருந்த நெல் சாகுபடி தற்போது 3,400 ஏக்கராக குறைந்துள்ளது.



விவசாயிகள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பருவமழை உரிய நேரத்தில் பெய்திருந்தாலும், ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



மேலும், கூலி ஆட்கள் பற்றாக்குறை, உர விலை உயர்வு மற்றும் நெல்லுக்கு சரியான விலை கிடைக்காமை ஆகியவை நெல் சாகுபடி குறைவதற்கான காரணங்களாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விலை நிர்ணயம் குறித்தும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,800 வழங்கப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் ரூ.2,200 மட்டுமே கிடைப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஆனைமலை பகுதியில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே அமைக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...