கோவை பேருந்தில் மூதாட்டியின் 5 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது

கோவையில் அரசு பேருந்தில் பயணித்த 67 வயது மூதாட்டியின் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 பணம் திருடப்பட்டது. சுந்தராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே உள்ள ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி தனலட்சுமி (67) என்ற மூதாட்டியிடமிருந்து அரசு பேருந்தில் 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3000 பணம் திருடப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 19) தனது மகள் வீட்டிற்குச் செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு நகர பேருந்தில் ஏறி சுந்தராபுரம் வந்து கொண்டிருந்தார் தனலட்சுமி. மகள் வீட்டை அடைந்த பின்னர், தனது கையப்பையில் வைத்திருந்த பணப்பையைக் காணவில்லை என்பதை உணர்ந்தார். அந்தப் பணப்பையில் 5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியும், ரூ.3000 பணமும் இருந்தது.

பேருந்தில் பயணம் செய்யும் போது திருட்டு நடந்திருக்கலாம் என்று சந்தேகித்த தனலட்சுமி, இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரகாஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...