பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் - உடனடி சீரமைப்பு தேவை

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைப்பால் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு, குடிநீர் விநியோக பாதிப்பு ஆகியவற்றால் உடனடி சீரமைப்பு தேவை என மக்கள் கோரிக்கை.


கோவை: பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (ஜூலை 20) மதியம் நடந்துள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியின் பிரதான குடிநீர் குழாய் தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் ஏராளமான தண்ணீர் வீணானது. குழாய் உடைப்பை சரி செய்த நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தபோது, சாலையின் மையத்தில் பெரிய குகை போன்ற பள்ளம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

உடனடியாக போக்குவரத்து காவல்துறையினர் பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்து, வாகனங்களை ஓரமாக செல்லும்படி அறிவுறுத்தினர். சில மாதங்களுக்கு முன்புதான் இப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறையால் ரவுண்டானா அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் குழாய் உடைப்பின் காரணமாக ரவுண்டானா பகுதியிலும் பிளவுகள் ஏற்பட்டு, மண்ணுக்குள் புதையும் நிலையில் உள்ளது. மேலும், அதனைச் சுற்றி வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், பொள்ளாச்சி நகரில் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து பாதிப்பு மற்றும் குடிநீர் விநியோக பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...