கோவையில் பள்ளி வேன் ஏறி முதலாம் வகுப்பு மாணவன் காயம்: அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள்

கோவை சிங்காநல்லூரில் உள்ள வெங்கடலட்சுமி தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவன் மீது வேன் ஏறி விபத்து ஏற்பட்டது. ஓட்டுநரின் கவனக்குறைவால் நடந்த இச்சம்பவம் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள வெங்கடலட்சுமி தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு முதலாம் வகுப்பு மாணவன் மீது பள்ளி வேன் ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், சிறுவன் மீது வேன் ஏறி இறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்த குழந்தைக்கு தற்போது அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருகூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் இரண்டு மகன்கள் இந்த தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களில் முதலாம் வகுப்பு படிக்கும் சிறுவனே இந்த விபத்தில் சிக்கியுள்ளான்.

சம்பவம் நடந்த விதம் குறித்து விசாரணையில் தெரியவந்த தகவல்களின்படி, வேனில் இருந்து மாணவர்கள் இறங்குவதற்கு முன்பே ஓட்டுநர் வாகனத்தை இயக்கிவிட்டார். இதனால், சிறுவன் ஓடும் வேனில் இருந்து இறங்கிய போது தவறுதலாக சக்கரத்தின் கீழ் விழுந்து விபத்துக்குள்ளானான்.

விபத்து நடந்தவுடன், அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு, காயமடைந்த சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போக்குவரத்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...