பெல்ஜியம் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிக் கோப்பை வென்ற கோவை சிறுமி மேஹாவுக்கு உற்சாக வரவேற்பு

பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி பதக்கங்கள் வென்று வெள்ளிக் கோப்பையை வென்ற கோவை சிறுமி மேஹாவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்ப்லாண்டர் கிராண்டு பிரிக்ஸு 2024 ஸ்கேட்டிங் போட்டியில் கோவையைச் சேர்ந்த சிறுமி மேஹா சிறப்பாக செயல்பட்டு வெள்ளிக் கோப்பையை வென்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த அருண் சக்தி மற்றும் வித்யா சம்பத் தம்பதியரின் மகளான மேஹா, இந்த சர்வதேச போட்டியின் ஆறு சுற்றுகளில் பங்கேற்றார்.



அதில் மூன்று சுற்றுகளில் தங்கப் பதக்கமும், மற்ற மூன்று சுற்றுகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். ஒட்டுமொத்த போட்டியின் முடிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிக் கோப்பையை வென்றார்.

நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி மேஹா, சிறு வயதிலேயே சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து பங்கேற்றவர்களில் இரண்டு பேர் மட்டுமே இந்த ஸ்கேட்டிங் போட்டியில் கோப்பை வென்றுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இவ்விருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கோயம்புத்தூரில் 33 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை இந்த சர்வதேச போட்டியில் பதக்கம் வெல்வது கனவாகவே இருந்தது. இந்நிலையில், சிறுமி மேஹா வெள்ளிக் கோப்பையை வென்று வந்தது ஸ்கேட்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிக் கோப்பையுடன் கோவை திரும்பிய மேஹாவுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள் பூங்கொத்து வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். எதிர்காலத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக கோப்பைகளை வென்று தருவதே தனது இலக்கு என மேஹா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் போட்டியாளர்கள் கோப்பையை வெல்ல முடியும் என பயிற்சியாளர் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...