கோவை வடவள்ளியில் பேக்கரி ஊழியரிடம் கொள்ளை முயற்சி: மூவர் கைது

கோவை வடவள்ளியில் பேக்கரி ஊழியர் ஒருவரிடம் கத்தியால் மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் ஜூலை 19 அன்று நடந்தது.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் பேக்கரி ஊழியர் ஒருவரை கத்தியால் மிரட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

வடவள்ளி ஜெயா நகரில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரியும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தைச் சேர்ந்த ஜீவநாதன் (25) என்பவர், வடவள்ளி அருகே உள்ள ஆவின் நிலையம் அருகே நண்பர் ஒருவரைப் பார்க்க நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள் ஜீவநாதனிடம் மதுகுடிக்க பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் தர மறுத்ததால், ஜீவநாதனின் வயிற்றில் கத்தியை வைத்து மிரட்டினர். ஜீவநாதன் சத்தம் போட்டதால், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மூவரையும் மடக்கிப் பிடித்து வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், பணம் கேட்டு மிரட்டியவர்கள் கஸ்தூரிநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த நிரஞ்சன் (23), வடவள்ளியைச் சேர்ந்த அர்ஜூன் (20), சபரிகிரி (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸார் ஜூலை 19 அன்று கைது செய்தனர்.

இச்சம்பவம் வடவள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல்துறையினரை அணுக வேண்டும் என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...