பொள்ளாச்சி அருகே கோழிப் பண்ணை இடிந்து விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையத்தில் கனமழை காரணமாக கோழிப் பண்ணை இடிந்து விழுந்தது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார், மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக கோழிப் பண்ணை இடிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவர் நடத்தி வரும் கோழிப் பண்ணை இடிந்து விழுந்தது.



இந்த கோழிப் பண்ணையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் வேலை செய்து வந்தனர். பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக கோழிப் பண்ணை சரிந்து விழுந்ததில், கோழிப் பண்ணையின் உரிமையாளர் முருகானந்தம் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.



இந்த விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மெமதாசிங் (33) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



படுகாயம் அடைந்த முருகானந்தம் (45), ரேவதி (40), ரவிசிங் (46), கொனாமிகா (20) ஆகிய நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...