கோவை: திமுக முன்னாள் எம்.பி. வி.பி. சண்முகசுந்தரம் காலமானார்

கோவையில் திமுக முன்னாள் எம்.பி. வி.பி. சண்முகசுந்தரம் (75) உடல்நலக் குறைவால் காலமானார். முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். சண்முகசுந்தரம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.


கோவை: கோவையில் திமுக முன்னாள் எம்.பி.யான வி.பி. சண்முகசுந்தரம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 20) காலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வி.பி. சண்முகசுந்தரம் 1996 முதல் 1998 வரை கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அவர் திமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், சண்முகசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், "திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பி. சண்முகசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...