கோவை TNAU-வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22-ல் நடைபெறுகிறது

கோவை TNAU-வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22-ல் நடைபெறுகிறது. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 200 இடங்களுக்கான சரிபார்ப்பு நடைபெறும். பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஜூலை 23-ல் சரிபார்ப்பு நடத்தப்படும்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 22ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNAU-வில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு ஜூன் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் காலியிடங்களுக்கு நகர்வு அடிப்படையில், தரவரிசையில் அடுத்ததாக இடம் பெற்ற மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்புப் பணிகள் மொத்தம் 200 இடங்களுக்கு நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக சேர்க்கை பெற்ற மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பட்டயப் படிப்புக்கான இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு ஜூலை 23ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் TNAU தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...