நெகமம் பகுதியில் தொடர் மழையால் தேங்காய் உடைக்கும் பணி பாதிப்பு: லட்சக்கணக்கான தேங்காய்கள் தேக்கம்

நெகமம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளதால் பணியாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.



கோவை: நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. இந்த பகுதியில் தேங்காய் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நெகமம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது லட்சக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

தொடர் மழையின் காரணமாக தேங்காய் களங்களில் பணிகள் ஜூலை 19 அன்று முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். மழை நீடித்தால் தேங்காய்கள் அழுகி வீணாகும் அபாயமும் உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...