கோவை மாநகராட்சி 1வது வார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன

கோவை மாநகராட்சி 1வது வார்டில் தெரு விளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை பணி ஆய்வு, மழைநீர் வடிகால் சுத்தம் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் ஜூலை 19 அன்று நடைபெற்றன.


கோவை: கோவை மாநகராட்சியின் 1வது வார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் ஜூலை 19 அன்று நடைபெற்றன. வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரனின் வழிகாட்டுதலின் பேரில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



வார்டு முழுவதும் தெரு விளக்குகள் பராமரிக்கும் பணி நடைபெற்றது.



வசுத்தரா நகரில் பாதாள சாக்கடை பணி தொடங்குவதற்காக ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் அப்பகுதியை ஆய்வு செய்தார்.



லவ்லி நகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.



லவ்லி நகர், ராஜூ கார்டன் மற்றும் விஸ்வநாதபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.



கலைஞர் நகரில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. கேப் டவுன் பகுதியில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...