கோவை தடாகம் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம்: குடியிருப்பு வாசிகள் வீடியோ பதிவு

கோவை தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். வனத்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பேரூர், தொண்டாமுத்தூர், நரசீபுரம், தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை கோழி, ஆடு, மாடு போன்ற வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி சென்றதாக தகவல் வெளியானது.



கடந்த வாரம் தொண்டாமுத்தூர் வண்டிக்காரன் புதூர் பகுதியில் வளர்ப்பு ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி சென்றதாக தகவல் வெளியான நிலையில், வனத்துறையினர் நவீன கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால், அதில் எந்த காட்சியும் பதிவாகவில்லை.



தற்போது, தடாகம் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாடும் காட்சியை குடியிருப்பு வாசிகள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வனத்துறையினர் சமீப காலமாக இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...