உடுமலையில் ஆடி மாத முதல் வெள்ளி: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலையில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாரியம்மன், வன பத்ரகாளியம்மன், ஆண்டாள் நாச்சியார், தங்காத்தாள் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்.


Coimbatore: உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலையின் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தயிர் உட்பட 14 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.



நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 14 வகை சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாரதனை, கோமாதா பூஜை ஆகியவை நடைபெற்றன.

குறுஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் மற்றும் ஏரி பாளையம் தங்காத்தாள் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...