மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி கோவை சிறு, குறு தொழில் அமைப்பினர் வலியுறுத்தல்

கோவை கொடிசியா வளாகத்தில் சிறு, குறு தொழில் அமைப்புகள் கூட்டம் நடத்தி, மின்கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதித்தனர். நிலைக்கட்டணம் குறைப்பு, பழைய கட்டண முறை மீண்டும் அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.


கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் பல்வேறு சிறு, குறு தொழில் அமைப்புகள் சார்பில் தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.





இக்கூட்டத்தில் மின்சார கட்டண உயர்வால் தொழில்துறையினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.





கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொடிசியா மற்றும் சிறு குறு தொழில் அமைப்பினர், தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ள மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும், பழைய மின் கட்டண முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தொழில்துறையினருக்கான நிலைக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பழைய கட்டண முறையின்படி நிலை கட்டணம் 35 ரூபாயாக இருந்தபோது தொழில்துறையினர் பலனடைந்து வந்ததாகவும், தற்போது 160 ரூபாயாக நிலை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் வளர்ச்சி தடைபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கோவையின் பிரதான உற்பத்தி தொழிலாக உள்ள பம்ப் உற்பத்தி மற்றும் அது சார்ந்த பவுண்டரி தொழில்கள், மழைக்காலத்தில் சரிவை சந்தித்து வரும் சூழலில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் இருக்கும்போதும் நிலை கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றனர். இது சிறு, குறு தொழில்களை மேலும் நலிவடையச் செய்யும் எனவும், எனவே நிலை கட்டணத்தை பழைய படி அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும், சூரிய தகடு மின்சார உற்பத்திக்கு நெட்வொர்க்கிங் சார்ஜஸ் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் எனவும் தொழில் துறையினர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விவரிக்க உள்ளதாகவும் கொடிசியா மற்றும் தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...