கோவையில் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மதிமுக இளைஞரணி மனு

கோவை மாநகர போக்குவரத்து ஆணையரிடம் மதிமுக இளைஞரணியினர் தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மனு அளித்தனர். நகரப் பகுதிகளில் அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகர போக்குவரத்து ஆணையரை இன்று (ஜூலை 18) சந்தித்த மதிமுக இளைஞரணியினர், தனியார் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகர் பகுதிகளில் தனியார் பேருந்துகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நேரங்களில் (Peak Hours) மாநகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலையும் மீறி இவ்வாறு பேருந்துகள் இயக்கப்படுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை ஆகிய முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகளின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் மதிமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் இராஜீவ் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...