கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரப்பட்டது.


கோவை: கோவை பட்டணத்தில் TVS குடியிருப்பு நுழைவு பாதையில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளைக் கண்டித்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது.





31.10.2023 அன்று பொதுமக்கள் பயன்படுத்தும் புல எண் 37/3ல் உள்ள நத்தம் காலியிடத்தில் கற்கள் இட்டும், சுவர் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி (W.P.No. 28218/2021) காவல்துறை பாதுகாப்புடன் அகற்றி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், ஆக்கிரமிப்பு அளந்து எல்லைக்கல் இடப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால், ஆக்கிரமிப்பு செய்த நபர் அந்த காலியிடம் தனக்கு சொந்தமானது என கூறி, பொதுமக்கள் பயன்படுத்தினால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தல் செய்து பேனர் வைத்துள்ளார். இது பொதுப்பாதையை பயன்படுத்தும் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது.

05.07.2024 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆக்கிரமிப்பை முழுமையாக விரைவில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருக்குமரன் நகர், விஐபி நகர், மற்றும் சீனிவாசா நகர் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இன்றி பயன்படும் வகையில், சரியான முறையில் அளந்து எல்லைக்கல் இட்டு ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...