உடுமலையில் வண்டல் மண் அனுமதி கோரி விவசாயிகள் போராட்டம்

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். வருவாய்த் துறையின் பாரபட்சம் குறித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதன்போது அதிகாரிகளுடன் வாக்குவாதமும் ஏற்பட்டது.

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை, வாளவாடி, சாப்பிட்டியார்குளம் உட்பட பல்வேறு நீர் நிலைகளில் மாவட்ட நிர்வாகம் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியது.



ஆனால், வருவாய்த் துறையினர் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் கூறுகையில், "உடுமலை பகுதியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அரசின் விதிப்படி தேவையான ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தும் வருவாய்த்துறையினர் எந்த காரணமும் சொல்லாமல் விவசாயிகள் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். வண்டல் மண் எடுப்பதற்கு தொடர்ந்து பாரபட்சம் காட்டிக் கொண்டிருப்பதால், அனைவருக்கும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்," என்றனர்.

மேலும், "வண்டல் மண் எடுக்க விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்," என அவர்கள் எச்சரித்தனர்.



பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், டிஎஸ்பி சுகுமாரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...