பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம்: கோவை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் காரீப் பருவத்திற்கான பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் அறிவிப்பு. பல்வேறு பயிர்களுக்கான காப்பீட்டு விவரங்கள், கட்டண விபரங்கள் மற்றும் காலக்கெடு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.764, உளுந்து மற்றும் பச்சைப் பயறு பயிர்களுக்கு ரூ.308 என்ற விகிதத்தில் காப்பீட்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயிர்களுக்கான காப்பீட்டின் கடைசி தேதி 31.07.2024 ஆகும். மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு ரூ.744, சோளத்திற்கு ரூ.245, கொள்ளுக்கு ரூ.308 என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான காப்பீட்டு காலக்கெடு 16.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களான கத்தரிக்காய்க்கு ஏக்கருக்கு ரூ.1170, வெங்காயத்திற்கு ரூ.1782, தக்காளிக்கு ரூ.1495 என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, இவற்றிற்கான காப்பீட்டு காலக்கெடு 31.08.2024 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழைக்கு ஏக்கருக்கு ரூ.2939, மரவள்ளிக்கு ரூ.1720, மஞ்சளுக்கு ரூ.722 என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, இவற்றிற்கான காப்பீட்டு காலக்கெடு 16.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயிர்காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், சொந்த நிலம் அல்லது குத்தகை நிலத்திற்கான ஆவணங்களான சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகி காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து பாதுகாப்பு பெற இந்த திட்டம் உதவும் என்றும், மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...