ஆழியார் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது: விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சியில் உள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் 101 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் கிடுகிடுவென உயர்ந்து 101 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. இதனை அடுத்து அங்கிருந்து உபரி நீர் ஆழியார் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.



நேற்று காலை 95.80 அடியாக இருந்த ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 7 மணி நிலவரப்படி 101.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5.3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு தற்போது வினாடிக்கு 3,814 கன அடி நீர் வரத்து உள்ளதாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மழை நீடித்தால் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என்றும் அவர்கள் கூறினர்.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நீர் இருப்பு வரும் காலங்களில் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...