தாராபுரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

தாராபுரத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார். 15 அரசுத் துறைகளின் 44 திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 300க்கும் மேற்பட்ட மனுக்களில் 240 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ருத்ராவதி சமுதாய நலக்கூடத்தில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த திட்டத்தின் கீழ், 15 அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் சமர்ப்பித்தனர். இதில் எரிசக்தி துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை ஆகியவை அடங்கும்.



முகாமில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 240 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், திமுக துணைச் செயலாளர் குமரவேல், திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் குணசேகரன், ஊராட்சி தலைவர்கள் பாலசுப்பிரமணியம், மகேந்திரன், மயில்சாமி, ஸ்ரீதர், கவுன்சிலர் காங்கிரஸ் ராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், குண்டடம் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் தங்கவேல், குணசேகரன், சின்னத்துரை, கதிரேஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...