கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நாளை முதல் கடன் மேளா: பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படும்

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 முதல் 30 வரை கடன் மேளா நடைபெறுகிறது. கல்வி, வீட்டு உபயோக பொருட்கள், வாகனம், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படும்.


கோவை: கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நாளை (ஜூலை 18) முதல் 30ம் தேதி வரை கடன் மேளா நடைபெற உள்ளது.

இந்த கடன் மேளாவில் கல்வி கடன், வீட்டு உபயோக பொருட்கள் கடன், மூத்த குடிமக்களுக்கு மறு அடமான கடன், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன கடன், கலைஞரின் கனவு இல்ல கடன், வீட்டு வசதி கடன், சிறு, குறு தொழில்முனைவோர் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 39 கிளைகளில் இந்த கடன் மேளா நடைபெறும். இதில் வைப்பு நிதி சேகரித்தல் மற்றும் கடன் வழங்கும் முகாம்களும் நடத்தப்படும். வைப்பு நிதிகளுக்கு அதிகபட்சமாக 8.10 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

மேற்கூறிய கடன்களுடன், கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன், நாட்டுப்புற கலைஞர்களுக்கு கடன், காலி மனை வாங்க கடன் உள்ளிட்ட கடன்களும் வழங்கப்படும். டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு காரணங்களுக்கும் கடன்கள் வழங்கப்படுகிறது.

கடன் மேளாவின் தேதிகள் மற்றும் இடங்கள் பின்வருமாறு:

- ஜூலை 18: அன்னூர், போத்தனூர், ஆனைமலை

- ஜூலை 19: திருப்பூர், அவினாசி, மதுக்கரை, தொண்டாமுத்தூர்

- ஜூலை 20: ஆர்.எஸ்.புரம், அனுப்பர்பாளையம், ஒண்டிபுதூர், நெகமம்

- ஜூலை 22: மடத்துக்குளம், நல்லூர், பெரியநாயக்கன்பாளையம், பேரூர்

- ஜூலை 23: கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு, கிருஷ்ணாபுரம், கோவில்பாளையம்

- ஜூலை 24: பாப்பநாயக்கன்புதூர், பாப்பம்பட்டி, இடையர்பாளையம், கொங்கு மெயின்ரோடு

- ஜூலை 25: கோட்டூர், மேட்டுப்பாளையம், குறிச்சி

- ஜூலை 26: பல்லடம், பொள்ளாச்சி, காந்திமாநகர்

- ஜூலை 29: பெதப்பம்பட்டி, சோமனூர், கணபதி

- ஜூலை 30: சுல்தான்பேட்டை, சிங்காநல்லூர், சூலூர், ராமநாதபுரம், உடுமலைப்பேட்டை, டாக்டர் நஞ்சப்பா ரோடு

மகளிர் உரிமை தொகை பெறும் மகளிர் பயனாளிகளுக்கு தொடர் வைப்பு நிதிக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்கு அரசு வழங்கும் உதவித்தொகை பெற வசதியாக புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...